TamilMother

tamilmother.com_logo

அமெரிக்காவின் மாடர்னா கொரோனா தடுப்பூசிகளை கொட்டி அழித்த மருந்து கம்பெனி ஊழியர்! காரணம் கேட்டால் ஷாக்

coronavaccine

வாஷிங்டன்: மாடர்னா கொரோனா வைரஸ் தடுப்பூசியின் 500 க்கும் மேற்பட்ட டோஸ்களை கொட்டி அழித்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு மருந்தாளர். விஸ்கான்சின் பகுதியைச் சேர்ந்த ஸ்டீவன் பிராண்டன்பர்க் என்ற மருந்தாளர் இப்படிச் செய்து போலீசாரால் கைது செய்யப்பட்டு கம்பி எண்ணிக் கொண்டு இருக்கிறார். மாடர்னா நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்தது. அந்த நிறுவனம் கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து வருகிறது. அவசர கால பயன்பாட்டுக்கு அமெரிக்க அரசும் அனுமதி கொடுத்துள்ளது. 500 டோஸ் மருந்து இந்த நிலையில்தான், மருந்து குப்பிகளை குளிர்சாதன பெட்டிகளில் இருந்து வெளியேற்றி கொட்டியுள்ளார் ஸ்டீவன்.

ஸ்டீவன் பிராண்டன்பர்க் கிராப்டனில் உள்ள அரோரா மருத்துவ மையத்தில் பணியாற்றியவர், அங்கு அவர் மாடர்னா தடுப்பூசியின் 57 குப்பிகளை எடுத்துச் சென்றது முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் விசாரித்து பார்த்தபோது, 500 என்ற அளவுக்கு, மருந்துகள் எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது.

மரபணு மாறிவிடும் என்று நம்பிக்கை இந்த தடுப்பூசிகள் பாதுகாப்பற்றவை என்று ஸ்டீவன் கருதியதாகவும், குறிப்பாக.. இவற்றைப் பயன்படுத்தும்போது மனிதனின் மரபணு மாற்றம் அடைந்து விடும் என்ற பயம் அவருக்கு இருந்ததாகவும், எனவே அதை போட்டு அழித்ததாகவும் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் அவரது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகளின் தாக்கத்தால்தான் இவ்வாறு மருந்துகளை வீணாக கொட்டி அழித்து விட்டதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விவாகரத்து வழக்கு ஸ்டீவனுக்கும், அவரது மனைவிக்கும் விவாகரத்து தொடர்பான வழக்கு நடந்து வருவதாகவும், இந்த வழக்கு காரணமாகத்தான் ஸ்டீபன் அப்செட்டில் இருந்துள்ளார், எனவே வீணாக மருந்துகளை கொட்டி அழித்துள்ளார் என்கிறார்கள் போலீஸார். கொரோனா தடுப்பூசிகளை போட்டுக் கொண்டால் மனிதன் முதலையாக மாறிவிடுவான்.. ஆண், பெண்ணாக மாறி விடுவார்கள், பெண்களுக்கு மீசை முளைத்து விடும் என்று உலக அளவில் பல்வேறு வதந்திகள் கிளம்பி வருகின்றன.

சிப் பொருத்தம் அமெரிக்க சமூக வலைத்தளங்களில், கொரோனா, தடுப்பு ஊசியை போட்டுக் கொண்டால் அதில் சிப் பொருத்தப்பட்டு தடுப்பூசி போட்டுக் கொண்ட அவர்களின் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு கண்காணிக்கும் என்று ஒரு வதந்தி பரவி வருகிறது. இவர்களுக்கு நடுவே மனிதனின் மரபணு மாறிவிடும் என்று கூறி இப்படி ஒருவர்.. அதுவும் மருந்து உற்பத்தி பிரிவில் பணியாற்ற கூடிய ஒருவர் மருந்துகளை நாசம் செய்துள்ளது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகமே தடுப்பூசி எப்போது தங்களுக்கு கிடைக்கும் என்று ஏங்கிக்கொண்டிருக்கும் நிலையில், வீணாக வதந்திகளை நம்பி இவ்வாறு அவற்றை அழித்து கெடுப்பது சரிதானா என்ற கேள்விகள் எழுகின்றன.

99054448.jpg

நடிகர் விக்ரமன் நாயர் காலமானார்

பிரபல நடிகரும் நாடக ஆசிரியருமான விக்ரமன் நாயர் மார்ச் 27 திங்கட்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 78. செய்திகளின்படி, விக்ரமன் நாயர் முதுமை தொடர்பான நோயால் கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறிது

மேலும் படிக்க »
128888848_gettyimages-1240021558.jpg

Gary Lineker £4.9m வரி பில் மேல் முறையீட்டை வென்றார்

“எனது முடிவுகளின் விளைவு என்னவென்றால், BBC மற்றும் Mr Lineker மற்றும் BT Sport மற்றும் Mr Lineker இடையே நேரடி ஒப்பந்தங்கள் இருந்ததால், இடைத்தரகர்கள் சட்டம் (IR35) சட்டத்தின்படி பொருந்தாது மற்றும் பொருந்தாது”

மேலும் படிக்க »
Rahul-Gandhi-latest-PTI_d_d.jpg

‘எனது உரிமைகளுக்கு பாதகம் ஏற்படாமல்’ வெளியேற்ற அறிவிப்புக்கு கட்டுப்படுவேன்: ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செவ்வாயன்று தனது அதிகாரப்பூர்வ பங்களாவை காலி செய்யுமாறு லோக்சபா செயலகத்தின் நோட்டீசுக்கு பதிலளித்தார், மேலும் அவரது கட்சித் தலைவர்கள் அரசாங்கத்தை அவமானப்படுத்தியதாகக் குற்றம் சாட்டியபோதும், வெளியேற்ற நோட்டீஸுக்குக் கட்டுப்படுவேன்

மேலும் படிக்க »
zydus-lifesciences-gets-usfda-nod-to-market-generic-drug.jpg

Zydus Lifesciences USFDA க்கு பொதுவான மருந்து, ஹெல்த் நியூஸ், ET ஹெல்த் வேர்ல்ட் சந்தைப்படுத்த ஒப்புதல்

புதுடெல்லி: மைக்செடிமா கோமாவுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படும் ஒரு பொதுவான தயாரிப்பை சந்தைப்படுத்த அமெரிக்க சுகாதார கட்டுப்பாட்டாளரிடம் இருந்து அனுமதி பெற்றுள்ளதாக சைடஸ் லைஃப் சயின்சஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. 100 mcg/vial, 200 mcg/vial மற்றும்

மேலும் படிக்க »
1680014882_photo.jpg

ஆண்ட்ராய்டு: வாட்ஸ்அப் விரைவில் ஆண்ட்ராய்டில் புதிய ஆடியோ அரட்டை அம்சத்தைப் பெறலாம்: அது என்ன

மெட்டாவுக்குச் சொந்தமான உடனடி செய்தியிடல் பயன்பாடு பகிரி பயனர் அனுபவத்தை மேம்படுத்த புதிய அம்சங்களைச் சேர்த்துக் கொண்டே இருக்கிறது. நிறுவனம் ஒரு புதிய அம்சத்தை பீட்டா சோதனை செய்வதாக கூறப்படுகிறது. கூகுள் பிளே பீட்டா

மேலும் படிக்க »
1680014721_photo.jpg

DU மகளிர் கல்லூரி மாணவிகள் விழாவின் போது துன்புறுத்தப்பட்டதாக குற்றம் சாட்டுகின்றனர், ஆண்கள் சுவர்களை அளந்ததாக கூறுகின்றனர் | டெல்லி செய்திகள்

புதுடெல்லி: மாணவர்கள் பெண்களுக்கான இந்திரபிரஸ்தா கல்லூரி தில்லி பல்கலைக்கழகத்தில், செவ்வாய்கிழமை ஒரு விழாவின் போது, ​​பலர் கல்வி நிறுவனத்தின் எல்லைச் சுவர்களில் ஏறி, பல மாணவர்களை துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.இச்சம்பவம் குறித்து கல்லூரி அதிகாரிகளிடமிருந்தோ, காவல்துறை

மேலும் படிக்க »
error: Content is protected !!
Scroll to Top