அழகா இல்லையே என கவலைப்பட்டு கொண்டிருக்கும் நபர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
ஜேர்மனி நாட்டின் ஜெனா பல்கலைகழகத்தை சேர்ந்த மனநல ஆய்வாளர்கள் ஹோல்ஜர் வீஸ், கரோலின் ஆல்ட்மேன் மற்றும் ஸ்டெபான் ஸ்க்வெய்ன்பெர்ஜர் ஆகியோர் தலைமையில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.
இதில் அழகான முகங்களை கொண்டவர்களை விட அழகற்ற முகங்களை கொண்டவர்களே அதிகளவில் நினைவில் இருப்பார்கள் என்று கண்டறியப்பட்டது.
ஆய்வில் கலந்து கொண்டவர்களில் பாதி பேர் வசீகர முகத்துடனும், மீதமுள்ள பாதி பேர் வசீகரம் குறைந்த முகத்துடனும் இருந்தனர்.
எனினும், அனைவரும் தாங்கள் தனித்துவமான தோற்றத்தை கொண்டவர்கள் என்று கருதினர்.
அழகான நபர்களைவிட அழகற்ற முகம் கொண்டவர்களின் புகைப்படங்கள் எளிதில் அடையாளம் காணப்பட்டன.
எனினும், ஏஞ்சலினா ஜோலீ போன்ற தனித்தன்மை வாய்ந்த முக அமைப்பை கொண்டவர்களை மக்கள் எளிதில் அடையாளம் கண்டுகொள்கின்றனர்.
மேலும் உணர்வு ரீதியிலான பாதிப்பு காரணமாக, அழகான முகத்தை கொண்டவர்களை நினைவில் வைப்பதற்கு கடினமாக உள்ளது என்றும் தெரியவந்துள்ளது.
இதற்கு ஆதாரமாக விஞ்ஞானிகள் தங்களது ஆய்வில் பயன்படுத்திய ஈ.ஈ.ஜி பதிவுகள் அதனை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதில் மூளையின் மின் செயல்பாடுகள் அதற்கேற்ப செயல்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து எஸ்செக்ஸ் பல்கலைகழத்தின் சமூக மற்றும் பொருளாதார ஆய்வு அமைப்பின் ஆராய்ச்சியாளரான கண்டி நைஸ் கூறுகையில், நல்ல தோற்றம் கொண்டவர்கள் தங்கள் அழகினால் ஆதாயம் பெறுகின்றனர்.
முக வசீகரம் ஆனது ஒருவரது தொழிலில் அவரது கவுரவம் குறித்த தீர்மானத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.
3வது ஒருநாள் போட்டியில் கழுகு, நாய் குறுக்கீடு செய்த பிறகு சேப்பாக்கத்தில் ரசிகர்களை வரவேற்கும் வினோதமான காட்சிகள்: பாருங்கள்
ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர்களின் இடைவிடாத அழுத்தத்தின் கீழ் டீம் இந்தியா பேட்டிங் யூனிட் மீண்டும் திணறியது, பார்வையாளர்கள் வெற்றி பெற்றனர். மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 2-1 என, புதனன்று 21 ரன்கள்