ஆண்களின் மலட்டுத் தன்மையை போக்கும் “பொன்னாங்கண்ணி”
பொன்னாங்கண்ணி கீரையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் பொதிந்து கிடக்கிறது.
பொன்னாங்கண்ணி ஓர் அற்புதமான உடற்தேற்றி என்று கூறலாம்.
உடல் வலியைப் போக்கக் கூடியது மட்டுமின்றி உடலுக்கு பலத்தையும் தரவல்லது.
பல்வேறு நரம்பு நோய்களையும் குணப்படுத்தும் வல்லமை படைத்தது.
பொன்னாங்கண்ணி ஞாபக சக்தியைத் தூண்டக் கூடியது. கண்களுக்கும், மூளைக்கும் குளிர்ச்சி தரவல்லது.
தலைவலி, மயக்கத்தை தணிக்க கூடியது. பொன்னாங்கண்ணி சாறு பாம்புக் கடி விஷத்தை முறிக்கும் தன்மை உடையது.
பொன்னாங்கண்ணிக் கீரை ஆண்களின் மலட்டுத் தன்மையையும் இயலாமையையும் போக்க கூடிய அற்புதமான மருந்தாகும்.
பொன்னாங்கண்ணிக் கீரையை உள்ளுக்கு சாப்பிட்டுவதாலும் எண்ணெயில் இட்டு நன்கு காய்ச்சி எடுத்து வைத்துக் கொண்டு தலைக்குத் தடவுவதாலும் தலைமுடி நன்கு செழுமையாக வளரும்.
பொன்னாங்கண்ணியை மேற்பூச்சு மருந்தாகப் பயன்படுத்தும் போது முகப்பருக்கள் போவதோடு கரும்புள்ளிகளும் காணாமற் போகும். முகம் பொலிவுடன் திகழும்.
பொன்னாங்கண்ணி சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் சத்து நிறைந்த உணவாகி அவர்களின் சோர்வைப் போக்குவதோடு சர்க்கரை நோய்க்கும் ஓர் துணை மருந்து ஆகிறது.
ரத்தத்தில் சேரும் சர்க்கரை மற்றும் கொழுப்புசத்தை குறைக்க வல்லது.

டாடா குழுமம் 2 பில்லியன் டாலர்களை சூப்பர் ஆப் முயற்சியில் செலுத்த திட்டமிட்டுள்ளது
மும்பை: டாடா குழுமம் அதன் சூப்பர் ஆப் முயற்சியில் மேலும் 2 பில்லியன் டாலர் புதிய மூலதனத்தை புகுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறது, ஏனெனில் சால்ட்-டு-சாஃப்ட்வேர் குழுமம் தனது டிஜிட்டல் வணிகத்தை மேம்படுத்த முயல்கிறது