TamilMother

tamilmother.com_logo

இந்த ஸ்பார்க்கை கூட பார்க்க முடியலைன்னா.. எதுக்கு கேப்டனா இருக்கணும்.. இப்படி மாட்டிகிட்டாரே தோனி!

m-s-dhoni-csk

சென்னை: நடந்து முடிந்த சையது முஷ்டாக் கோப்பையில் தமிழக வீரர்கள் ஆடிய விதம் சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு பெரிய நெருக்கடியை கொடுத்துள்ளது. 2021 ஐபிஎல் தொடர் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் நடந்து முடிந்த சையது முஷ்டாக் அலி கோப்பை கவனம் பெற்றுள்ளது. ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக திட்டமிட்டு இந்த தொடர் நடத்தப்பட்டு உள்ளது. நேற்று நடந்த இறுதிப்போட்டியில் பரோடா அணியை வீழ்த்தி தமிழக அணி வெற்றிபெற்றது. 2 கேம் சேஞ்சர்ஸ்.. பெரிய நம்பிக்கை வைக்கும் கோலி..இங்கிலாந்துக்கு சிம்ம சொப்பனமாகும் தமிழக வீரர்கள் இந்த தொடர் முழுக்க தமிழக அணிதான் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தியது. இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட தமிழக அணி தோல்வி அடையவில்லை. தமிழ்நாடு நடந்து முடிந்த சையது முஷ்டாக் கோப்பையில் தமிழக வீரர்கள் மிகவும் சிறப்பாக ஆடினார்கள். அதிலும் லீக் ஆட்டங்களில் ஜெகதீசன் மிகவும் சிறப்பாக ஆடினார். ஒன் டவுன் பேட்ஸ்மேனான இவர் தமிழக அணியின் வெற்றிக்கு ஒவ்வொரு போட்டியிலும் பெரிய அளவில் உதவினார். வீரர்கள் இன்னொரு பக்கம் ஆங்கர் பேட்ஸ்மேன் பாபா அபராஜித் அமைதியாக களத்தில் உறுதியாக நின்று ஒவ்வொரு முறையும் தமிழக அணியின் வெற்றிக்கு உதவினார். தமிழக அணி பல போட்டிகளில் சரிவை சந்திப்பதில் இருந்து காப்பாற்றியவர் பாபா அபராஜித்தான். திறமை இது போக இன்னொரு பக்கம் தமிழக வீரர் சாய் கிஷோர் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்தார். எல்லா போட்டியிலும் இவர் குறைந்தது 2 விக்கெட்டாவது எடுத்தார். 4 ஓவர்களை வீசி மிக குறைந்த ரன்களை கொடுத்த விக்கெட்டுகளை அள்ளினார். சிஎஸ்கே இந்த மூன்று வீரர்களில் ஜெகதீசன் , சாய் கிஷோர் இரண்டு பேரும் சிஎஸ்கே வீரர்கள். அபராஜித் முன்னாள் சிஎஸ்கே வீரர். இவர்கள் சிஎஸ்கேவில் தொடர்ந்து தோனி மூலம் புறக்கணிக்கப்பட்ட வீரர்கள். இவ்வளவு திறமை இருந்தும் கூட தோனி இவர்களுக்கு ஒருமுறை கூட முறையான வாய்ப்பு கொடுத்தது இல்லை. ஜெகதீசன் ஜெகதீசனாவது இரண்டு போட்டிகளில் ஆடினார். சாய் கிஷோர் அந்த வாய்ப்பும் கூட கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருகிறார். கேட்டால் இவர்களுக்கு ஸ்பார்க் இல்லை என்று கூறி தோனி ஓரம்கட்டியுள்ளார். வலைப்பயிற்சியில் செயல்படுவதை பார்த்து இவர்களுக்கு தோனி வாய்ப்பு கொடுக்கவில்லை. ஆனால் தினேஷ் கார்த்திக் கேப்டன்சிக்கு கீழ் தமிழக அணியை வெற்றிபெற வைத்தது இவர்கள்தான். கேள்வி இதனால் தோனி மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. இளம் வீரர்கள் இவ்வளவு திறமையாக இருக்கிறார்கள். இவர்களிடம் ஸ்பார்க்கை பார்க்கவில்லை என்றால் என்ன நியாயம். பிறகு எதற்கு தோனி கேப்டனாக இருக்க வேண்டும் என்று பலர் விமர்சனங்கள் வைத்து வருகிறார்கள்.

99054448.jpg

நடிகர் விக்ரமன் நாயர் காலமானார்

பிரபல நடிகரும் நாடக ஆசிரியருமான விக்ரமன் நாயர் மார்ச் 27 திங்கட்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 78. செய்திகளின்படி, விக்ரமன் நாயர் முதுமை தொடர்பான நோயால் கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறிது

மேலும் படிக்க »
128888848_gettyimages-1240021558.jpg

Gary Lineker £4.9m வரி பில் மேல் முறையீட்டை வென்றார்

“எனது முடிவுகளின் விளைவு என்னவென்றால், BBC மற்றும் Mr Lineker மற்றும் BT Sport மற்றும் Mr Lineker இடையே நேரடி ஒப்பந்தங்கள் இருந்ததால், இடைத்தரகர்கள் சட்டம் (IR35) சட்டத்தின்படி பொருந்தாது மற்றும் பொருந்தாது”

மேலும் படிக்க »
Rahul-Gandhi-latest-PTI_d_d.jpg

‘எனது உரிமைகளுக்கு பாதகம் ஏற்படாமல்’ வெளியேற்ற அறிவிப்புக்கு கட்டுப்படுவேன்: ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செவ்வாயன்று தனது அதிகாரப்பூர்வ பங்களாவை காலி செய்யுமாறு லோக்சபா செயலகத்தின் நோட்டீசுக்கு பதிலளித்தார், மேலும் அவரது கட்சித் தலைவர்கள் அரசாங்கத்தை அவமானப்படுத்தியதாகக் குற்றம் சாட்டியபோதும், வெளியேற்ற நோட்டீஸுக்குக் கட்டுப்படுவேன்

மேலும் படிக்க »
zydus-lifesciences-gets-usfda-nod-to-market-generic-drug.jpg

Zydus Lifesciences USFDA க்கு பொதுவான மருந்து, ஹெல்த் நியூஸ், ET ஹெல்த் வேர்ல்ட் சந்தைப்படுத்த ஒப்புதல்

புதுடெல்லி: மைக்செடிமா கோமாவுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படும் ஒரு பொதுவான தயாரிப்பை சந்தைப்படுத்த அமெரிக்க சுகாதார கட்டுப்பாட்டாளரிடம் இருந்து அனுமதி பெற்றுள்ளதாக சைடஸ் லைஃப் சயின்சஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. 100 mcg/vial, 200 mcg/vial மற்றும்

மேலும் படிக்க »
1680014882_photo.jpg

ஆண்ட்ராய்டு: வாட்ஸ்அப் விரைவில் ஆண்ட்ராய்டில் புதிய ஆடியோ அரட்டை அம்சத்தைப் பெறலாம்: அது என்ன

மெட்டாவுக்குச் சொந்தமான உடனடி செய்தியிடல் பயன்பாடு பகிரி பயனர் அனுபவத்தை மேம்படுத்த புதிய அம்சங்களைச் சேர்த்துக் கொண்டே இருக்கிறது. நிறுவனம் ஒரு புதிய அம்சத்தை பீட்டா சோதனை செய்வதாக கூறப்படுகிறது. கூகுள் பிளே பீட்டா

மேலும் படிக்க »
1680014721_photo.jpg

DU மகளிர் கல்லூரி மாணவிகள் விழாவின் போது துன்புறுத்தப்பட்டதாக குற்றம் சாட்டுகின்றனர், ஆண்கள் சுவர்களை அளந்ததாக கூறுகின்றனர் | டெல்லி செய்திகள்

புதுடெல்லி: மாணவர்கள் பெண்களுக்கான இந்திரபிரஸ்தா கல்லூரி தில்லி பல்கலைக்கழகத்தில், செவ்வாய்கிழமை ஒரு விழாவின் போது, ​​பலர் கல்வி நிறுவனத்தின் எல்லைச் சுவர்களில் ஏறி, பல மாணவர்களை துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.இச்சம்பவம் குறித்து கல்லூரி அதிகாரிகளிடமிருந்தோ, காவல்துறை

மேலும் படிக்க »
error: Content is protected !!
Scroll to Top