TamilMother

tamilmother.com_logo

என்றென்றும் இளமையாக இருக்க வேண்டுமா?

அனைவருமே நன்கு அழகாகவும், இளமையுடனும் நீண்ட நாட்கள் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம்.
இளமை என்று ஒன்று இருந்தால், நிச்சயம் முதுமையும் வரும்.
ஆனால் அத்தகைய முதுமை, இளமை காலத்திலேயே வந்தால் தான் மிகவும் கஷ்டம்.
நிறைய பேர் இத்தகைய பிரச்னையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர், இதற்காக நிறைய ஆன்டிஏஜிங் கிரீம்களை பயன்படுத்துகின்றனர்.
இருப்பினும் அதற்கான பலன் சிறிது நாட்கள் மட்டும் தானே தவிர, முதுமை வயது எட்டும் வரை நீடிப்பதில்லை.
ஆனால் இந்த பிரச்னைக்கு உணவு, உடற்பயிற்சிகளால் தீர்வு காண முடியும்.

ஆன்டி ஆக்ஸிடன்ட் உணவுகள்

நல்ல ஆரோக்கியமான, இளமைத் தோற்றத்தை நீட்டிக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் உள்ள உணவுகளை சேர்த்து வந்தால், உடலில் உள்ள டாக்ஸின்கள் வெளியேறி, உடலே நன்கு பொலிவோடு அழகாக மின்னும்.
அதிலும் குறிப்பாக வைட்டமின் சி, ஏ, ஈ, லைகோபைன் மற்றும் லூடின் போன்ற ஆன்டிஆ க்ஸிடன்ட்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், முதுமை வயதிலும், சற்று இளமையுடனேயே இருக்கலாம்.

மாம்பழம்

கோடைகாலத்தில் மாம்பழம் மிகவும் விலைமலிவாக கிடைக்கும்.
இந்த பழத்தில் கரோட்டினாய்டு பீட்டாகரோட்டீன் என்னும் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. இவை சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள உதவும். எனவே முடிந்த அளவில் இதனை வாங்கி சாப்பிடுவது, இளமை தோற்றத்தை அதிகரிக்கும்.

கீரை

கீரையில் லூடின் மற்றும் ஸீக்ஸாக்தைன் என்னும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன.
எனவே கீரையை அதிகம் சாப்பிட்டால், இளமையுடன் இருக்கலாம்.
ஒரு கப் பசலைக் கீரையில், சருமத்திற்கும், உடலுக்கும் ஆரோக்கியத்தை தரும் ஆன்டி ஆக்ஸிடன்ட்களான லைகோபைன் மற்றும் இதர வைட்டமின்களும் நிறைந்துள்ளன.

ப்ராக்கோலி

பச்சை இலைக் காய்கறிகளில் ப்ராக்கோலியில் அதிக அளவில் லைகோபைன் உள்ளது. எனவே சருமத்தில் உள்ள சுருக்கங்களை போக்கி, நன்கு இளமையாகக் காணப்பட, இந்த காய்கறியை உணவில் சேர்ப்பது நல்லது.

முட்டை

முட்டையிலும், லூடின் மற்றும் ஸீக்ஸாக்தைன் என்னும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்திற்கு மட்டுமின்றி, கண்களுக்கும் சிறந்தது.

குடைமிளகாய்

குடைமிளகாயில் சருமத்தையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும், வைட்டமின் ஏ அதிகம் உள்ளது.
அதிலும் இந்த காய்கறியில் நிறைய வண்ணங்கள் உள்ளன. இவை அனைத்திலுமே கரோட்டினாய்டுகள் மற்றும் பீட்டாகரோட்டீன் அதிகம் உள்ளன.

பால்

பாலில் கால்சியம், புரோட்டீன் மட்டுமின்றி வைட்டமின் ஏ மற்றும் கரோட்டீனாய்டுகள் அதிகம் நிறைந்துள்ளது.
இந்த ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த பாலை அதிகம் குடித்தால், நிச்சயம் உடல் ஆரோக்கியத்துடன் இளமையோடு இருக்கலாம்.

தக்காளி

தக்காளியில் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் முதுமைக் கோடுகள் போன்றவற்றை தடுக்கும் லைகோபைன் அதிகமாக இருக்கிறது. எனவே இதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது சருமத்திற்கு மாஸ்க் போன்றும் பயன்படுத்தலாம்.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களில் ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையில் வைட்டமின் சி என்னும் ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்திருப்பது தெரியும்.
ஆகவே இவற்றை சாப்பிட்டால் இதில் உள்ள வைட்டமின் சி, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, சருமத்தை புத்துணர்ச்சியுடனும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவும்.
நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள இந்த பழத்தில் லைகோபைன் என்னும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டும் அதிகம் உள்ளது. எனவே இவற்றை அதிகம் சாப்பிட, வெயிலினால் பாதிப்படைந்த சரும செல்கள் அனைத்தும் குளிர்ச்சியடைந்து, சருமம் அழகாக காணப்படும்.

உடற்பயிற்சி

உடல் உறுப்புகளின் சீரான செயல்பாட்டுக்கும், நல்ல நிலையில் வைத்துக் கொள்வதற்கும் உதவுகிற ஒரே தீர்வு உடற்பயிற்சி.
உடற்பயிற்சி செய்வதன் மூலம் தசைகள் நன்றாக விரிவடையும். உடலில் சோர்வு நீங்கும், மனதில் உற்சாகம் பிறக்கும்.
நிம்மதியான தூக்கம் வரும், எந்த பக்கவிளைவும் இல்லாதது.
தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்களுக்குப் புற்றுநோய் வரும் வாய்ப்புகள்கூட குறையும் என்கிறது ஆராய்ச்சி.
வாரத்துக்கு மூன்று மணி நேரம் நடந்தால், மாரடைப்பைத் தடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறது ஓர் ஆராய்ச்சி. மாரடைப்பு மட்டுமல்ல, பல்வேறு நோய்கள் வருவதற்கான வாய்ப்பும் வெகுவாகக் குறையும்.
ரத்த ஓட்டம் சீராகும், உடலுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும், மற்றவர்களுடன் உரையாடிய படியே நடக்கும்போது மனதிலும், உடலிலும் உற்சாகம் பிறக்கும்.

எப்படி சாப்பிட வேண்டும்?

காலை ஆறு மணிக்கு எழுந்து உடற்பயிற்சியை முடித்துவிடுங்கள்.
சுகமான காற்று முகத்தில்படும் போது, புத்துணர்ச்சி கிடைக்கும்.
பிறகு, அரை மணி நேரம் கழித்து பால், காபி, டீ என ஏதாவது ஒன்றைக் குடிக்கலாம்.
8 மணிக்கு 3 இட்லி, தோசை, இடியாப்பம் என எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளைத் தேர்ந்தெடுங்கள். மதியம் 1 மணிக்கும், இரவில் 8 மணிக்கும் சாப்பிட வேண்டும்.
கண்டிப்பாக 10 மணிக்கு மேல் தூங்கிவிட வேண்டும். இதுபோன்று கடைப்பிடித்தால் கண்டிப்பாக முதுமையிலும் இளமையாக வாழலாம்!

Tata-Capital.jpg

டாடா கேபிட்டல் ஃபைனான்சியல் சர்வீசஸ், டாடா கிளீன்டெக் ஆகியவை டாடா கேபிட்டலுடன் இணைகின்றன.

Tata Capital Financial Services மற்றும் Tata Cleantech Capital ஆகியவை அவற்றின் தாய் நிறுவனமான Tata Capital உடன் இணைக்கப்படும் என்று Tata Capital Financial Services இன் பங்குச் சந்தை தாக்கல்

மேலும் படிக்க »
1680017258_photo.jpg

கேரளா மதுபானச் செய்திகள்: இந்த நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு மது விற்பனை வருவாய் | திருவனந்தபுரம் செய்திகள்

திருவனந்தபுரம்: நோய்வாய்ப்பட்டவர்களுக்கு நிம்மதி வருவாய் சேகரிப்பு மாநிலத்தின், கலால் துறை 2022-23 நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்ட திருத்தப்பட்ட வருவாய் வசூல் இலக்கை அடைய உள்ளது, இது இன்னும் இரண்டு நாட்களில் முடிவடையும்.TOI ஆல் அணுகப்பட்ட தரவுகளின்படி,

மேலும் படிக்க »
viking-therapeutics-obesity-drug-shows-promise-in-early-stage-study-shares-soar.jpg

வைக்கிங் தெரபியூட்டிக்ஸ் உடல் பருமன் மருந்து ஆரம்ப-நிலை ஆய்வில் உறுதிமொழியைக் காட்டுகிறது, பங்குகள் உயர்கின்றன, ஹெல்த் நியூஸ், ET ஹெல்த் வேர்ல்ட்

புதுடெல்லி: வைகிங் தெரபியூட்டிக்ஸ் இன்க் செவ்வாயன்று தனது சோதனை உடல் பருமன் மருந்து பாதுகாப்பானது மற்றும் ஆரம்ப கட்ட ஆய்வில் எடையை 6 சதவீதம் வரை குறைக்க உதவியது, சந்தைக்கு முந்தைய வர்த்தகத்தில் அதன்

மேலும் படிக்க »
PTI03_28_2023_000041A.jpg

FY23 இன் 9 மாதங்களில் பொதுத்துறை வங்கிகள் ₹91,000 கோடியை தள்ளுபடி செய்தன

ராஜ்யசபாவில் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளின்படி, நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் பொதுத்துறை வங்கிகள் சுமார் ₹91,000 கோடியை தள்ளுபடி செய்துள்ளன. 2222 நிதியாண்டில் தள்ளுபடி செய்யப்பட்ட கணக்குகளில் ₹5 இல் ₹1க்கு மேல் PSB

மேலும் படிக்க »
1680016912_photo.jpg

ஸ்டீவ் ஸ்மித் ஐபிஎல்-க்கு திரும்பினார் ஆனால் ஒரு வீரராக இல்லை | கிரிக்கெட் செய்திகள்

புதுடெல்லி: ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தின் பங்கு குறித்த ஊகங்கள் பரவி வருகின்றன. ஐபிஎல் 2023 திங்களன்று அவர் போட்டிக்கு திரும்புவது குறித்து சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.“நமஸ்தே இந்தியா. உங்களுக்காக

மேலும் படிக்க »
March28-c_d.jpg

பங்களாவை காலி செய்யுமாறு ராகுல் கூறியதையடுத்து, மத்திய அரசை கார்கே கடுமையாக சாடியுள்ளார்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே செவ்வாயன்று ராகுல் காந்தி தனது அதிகாரப்பூர்வ பங்களாவை காலி செய்யும்படி மத்திய அரசை கடுமையாக சாடினார், கட்சியின் முன்னாள் தலைவரை “அச்சுறுத்தும், பயமுறுத்தும் மற்றும் அவமானப்படுத்தும்” அரசாங்கத்தின் அணுகுமுறையை

மேலும் படிக்க »
error: Content is protected !!
Scroll to Top