மனிதர்களின் வளர்ச்சியை அதிகரிக்க செய்வது உணவு வகைகள் தான். வேக வைக்கப்பட்ட காய்கறிகளையோ, பச்சை காய்கறிகளோ சாப்பிட்டால் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.
இயற்கையான சில உணவு வகைகள் உணர்வுகளை தூண்ட செய்கிறது.
ஒயின்
ஒயின் குடிப்பதால் நம்முடைய உணர்வு நன்கு தூண்டப்படுகிறது. இது மனதை ரிலாக்ஸ் ஆக வைக்க உதவுகிறது.
போர்ச்சுகல் தேசத்தை தாயகமாகக் கொண்ட போர்ட் ஒயின் தான் அதிகமாக உணர்வை தூண்டும் பொருளாகக் கருதப்படுகிறது. ஒயினானது, ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் உணர்வுகளை நன்றாகத் தூண்டுகிறது.
உடலில் டெஸ்டோஸ்டிரோன் (testosterone) அளவை அதிகரிக்கச் செய்யும் புரோமிலெய்ன் (Bromelain) என்னும் பொருள் வாழைப்பழத்தில் நிறைந்துள்ளது. அதிக அளவு சர்க்கரை அடங்கியுள்ளது.
சிப்பி
முத்துச் சிப்பிகளை ஒத்த மென்மையான கடல் வாழ் உயிரினம் கடல் சிப்பி. ஓட்டிற்குள் இருக்கும் சதைப்பற்றான பகுதியே உண்பதற்குத் தகுதியானது. ஆனால் அறிவியல் பூர்வமாக இதில் உள்ள ஜிங்க் சத்தால், அதிகப்படியான டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சுரப்பதாக சொல்லப்படுகிறது.
ஜிங்க் சத்து குறைந்த அளவு இருந்தால் அது ஆண்மையற்ற நிலையை உண்டாக்கும். எனவே இதை உண்பதால், உடலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. புகழ்பெற்ற எழுத்தாளரான காஸநோவா, ஒரு நாளைக்கு 50 கடல் சிப்பிகளை உண்பாராம்.
பூண்டு
ரத்த ஓட்டத்திற்கு உதவும் அல்லிசின் (allicin ) என்னும் பொருள் பூண்டில் நிறைந்துள்ளது. ஆண்களது இடுப்புப் பகுதிக்கு செல்லும் ரத்த ஓட்டம் நன்றாக இருந்தால் பிரச்னை ஏதும் இருக்காது.
நைட்ரிக் ஆக்ஸைடு சிந்தேஸ் என்னும் பொருளை உற்பத்தி செய்வதில் பூண்டு பெரிதும் உதவுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சாக்லெட்
ஆங்கிலத்தில் கடவுள்களின் உணவு என்று அழைக்கப்படும் சாக்லெட்டானது எப்போதுமே உணர்வுகளுடனும், காதலுடனும் தொடர்புள்ளது. மூளையில் காணப்படும் ஃபீனைல் எத்திலமைன் (Phenylethylamine) மற்றும் செரடோனின் (serotonin) ஆகிய வேதிப்பொருள்கள் சாக்லெட்டிலும் உள்ளன.
அவகோடா
ஆண், பெண் ஆகிய இருபாலருக்குமே உணர்வைத் தூண்டும் விடயத்தில் பொதுவாகப் பயன்படும் பழம் அவகோடா (வெண்ணைய் பழம்). இப்பழமானது மெக்சிகோவின் மையப் பகுதியில் 14, 15ம், 16ம் நூற்றாண்டுகளில் அமைந்திருந்த அஸ்டெக் பேரரசின் கீழ் வாழ்ந்த மக்களான அஸ்டெக்குகள் இப்பழ மரத்தை ‘விதைப்பை மரம்‘ என்றே அழைத்தனர்.
அத்திப்பழம்
பீட்டா கரோட்டின், மக்னீசியம், வைட்டமின் ஈ, பொட்டாசியம் மற்றும் புரதச்சத்து நிறைந்த பழம் அத்திப்பழம். இந்த பழத்தில், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, சுண் ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், மாங்கனீஸ், பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.
இவை அனைத்துமே செக்ஸ் குறைபாடுகளைக் குறைக்கும் திறன் பெற்றவை. அத்திப்பழமானது கிளியோபாட்ராவிற்கு மிகவும் இஷ்டமான பழமாக இருந்ததில் வியப்பேதுமில்லை.
அஸ்பாரகஸ்
அஸ்பாரகஸ் என்றே பலராலும் அறியப்படும், இதன் தமிழ்ப் பெயர் சதாவேரி (அ) தண்ணீர்விட்டான் கிழங்கு ஆகும். கி.பி 19 ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டில் திருமணத்திற்கு முதல் நாள் மணமகன்களுக்கு மூன்று வேளையும் அஸ்பாரகஸ் உணவாக அளிக்கப்பட்டதாம்.
பொட்டாசியம், வைட்டமின் பி6, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, தையமின் மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவை அஸ்பாரகஸில் ஏராளமாக உள்ளன. ஃபோலிக் அமிலமானது குழந்தைகளுக்கு பிறவியிலேயே ஏற்படும் கோளாறுகளைக் குறைக்க உதவுகிறது. எனவே அஸ்பாரகஸ் உண்பது கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நல்லது.
துளசி
இனிமையான மணமுடைய மூலிகை துளசியாகும். இத்தாலியில், ‘நிக்கோலஸ், என்னை முத்தமிடு’ என்னும் பொருள் தரும் சொற்களால் அழைக்கப்படுகிறது. இது,உணர்வுகளையும், இனவிருத்தித் திறனையும் பெருக்க உதவுகிறது.
மேலும் இதில் மெக்னீசியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி மற்றும் கே ஆகிய சத்துக்கள் உள்ளன. இவை அனைத்துமே, ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கின்றன. அதுமட்டுமின்றி ரத்த நாளங்களில் ரத்தம் உறைவதைத் தடுக்கின்றன. இதன் காரணமாக ரத்த ஓட்டம் நன்றாக விருத்தியடைகிறது. மேலும் அனைத்து வகை தலைவலிகளையும் குறைக்கும் தன்மையும் துளசிக்கு உண்டு.
மிளகாய்
மிளகாயின் காரத்தன்மை உடலினை தூண்டுகிறது. குடைமிளகாயிலிருந்து சிகப்பு மிளகாய் வரை அனைத்துமே . மிளகாயில் உள்ள கேப்சைசின் (Capsaicin) என்னும் வேதிப்பொருள் ரத்த ஓட்டத்தையும், இதயத்துடிப்பையும் அதிகரிக்கச் செய்கிறது.
உடல் வெப்பத்தை உயர்த்துகிறது. வியர்வையையும் உற்பத்தி செய்கிறது. மேற்கூறிய அறிகுறிகள் அனைத்தும் கேப்சைசினானது, உடலில் எண்டோர்ஃபின் (endorphins) என்னும் வேதிப்பொருளை சுரக்கச் செய்கிறது.
மேலும் நரம்பு முனை களை தூண்டி, இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்து உடலை மிகவும் உணர்ச்சி ததும்பும் அளவுக்கு மாற்றுகிறது.

மைக்ரோசாப்ட் பாதுகாப்பு கோபிலட்டை தனிப்பட்ட முன்னோட்டத்தில் அறிமுகப்படுத்துகிறது
அக்டோபர் 6, 2015 அன்று நியூயார்க்கில் நடந்த Windows 10 சாதனங்கள் நிகழ்வின் போது மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷனின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா பேசுகிறார். மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் தனது முதல் லேப்டாப், மூன்று