TamilMother

tamilmother.com_logo

டெல்லி வந்தது அப்துல்கலாம் உடல்: மோடி நேரில் அஞ்சலி (வீடியோ இணைப்பு)

டெல்லி வந்தது அப்துல்கலாம் உடல்: மோடி நேரில் அஞ்சலி (வீடியோ இணைப்பு)

கவுகாத்தியில் இருந்து ராணுவ விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டு வரப்பட்ட அப்துல் கலாமின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இரண்டாம் இணைப்பு:
ஐஏஎப் விமானத்தில் கொண்டு வரப்பட்ட முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடல் டெல்லியில் உள்ள பாலம் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அவரது உடலை பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், முப்படைத் தளபதிகள் பெற்றுக் கொண்டனர்.
பிற்பகல் 3 மணிக்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக கலாம் உடல் வைக்கப்பட உள்ளது.
அப்துல் கலாமின் உறவினர்களும் டெல்லி விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.

முதலாம் இணைப்பு:
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக இன்று மதியம் டெல்லிக்கு கொண்டு வரப்படுகிறது.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், ஷில்லாங்கில் நேற்று இரவு மாரடைப்பால் காலமானார்.
இந்நிலையில், ஷில்லாங் பெத்தானியா மருத்துவமனையில் இருந்து அவரது உடல் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு இன்று கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் அமித் மகாஜன் தெரிவித்துள்ளார்.
ஷில்லாங்கில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு கலாமின் உடல் ஹெலிகாப்டர் மூலமாக எடுத்து வரப்பட்டுள்ளது.
அங்கிருந்து டெல்லிக்கு சிறப்பு விமானம் மூலமாக கொண்டு செல்லப்படும் கலாமின் உடலை, டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் மோடி பெற்றுக்கொள்கிறார்.
இன்று மதியம் 3 மணி முதல் பொதுமக்கள் அப்துல்கலாமின் உடலுக்கு அஞ்சலி செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் அனைத்தும் அப்துல்கலாமின் சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ”நான் இறந்து போய் விட்டால், அன்றைய தினம் விடுமுறை விட்டு விடக் கூடாது. என் மீது உண்மையான அன்பு கொண்டவர்களாக இருந்தால்,கூடுதலாக ஒருநாள் வேலை பார்க்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டவர் அப்துல்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

1679570444_photo.jpg

ராகுல் காந்தி: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்படுவார்: பாஜக | இந்தியா செய்திகள்

புதுடெல்லி: பாஜக வட்டாரங்கள் வியாழக்கிழமை கூறியது காங்கிரஸ் மைல்கல் படி, எம்.பி., ராகுல் காந்தி, ‘உடனடி தகுதி நீக்கத்தை’ எதிர்கொள்கிறார் உச்ச நீதிமன்றம் ஜூலை 10, 2013 தீர்ப்பு அவருக்கு 2 ஆண்டுகள் சிறை

மேலும் படிக்க »
Cold-a_d.jpg

பெண் பிறப்புறுப்பு காசநோய்க்கு சரியான நேரத்தில் தலையீடு தேவை என்று நிபுணர்கள் வெளிப்படுத்துகின்றனர்

பெண் பிறப்புறுப்பு காசநோய் (FGTB) பொதுவாக பெண்களில் காணப்படுகிறது மற்றும் உடனடி மருத்துவ கவனிப்பு தேவைப்படுகிறது. இது மைக்கோபாக்டீரியம் காசநோயால் ஏற்படுகிறது (அரிதாக மைக்கோபாக்டீரியம் போவிஸ் மற்றும்/அல்லது வித்தியாசமான மைக்கோபாக்டீரியா) பொதுவாக நுரையீரல் அல்லது

மேலும் படிக்க »
1679570050_photo.jpg

120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய Xiaomi 11i ஹைப்பர்சார்ஜ் இந்தியாவில் விலைக் குறைப்பைப் பெறுகிறது

Xiaomi வேகமாக சார்ஜ் செய்யும் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது — Xiaomi 11i ஹைப்பர்சார்ஜ் கடந்த ஆண்டு இந்தியாவில் 5ஜி. ஸ்மார்ட்போன் இப்போது அதன் இரண்டாவது விலைக் குறைப்பைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு இந்த ஸ்மார்ட்போனின்

மேலும் படிக்க »
த்ரோபேக்: ஐஸ்வர்யா ராய் சல்மான் கானுடன் ஏன் பிரிந்தார் என்ற தனது அறிக்கையால் பி-டவுன் அதிர்ச்சியடைந்தபோது

த்ரோபேக்: ஐஸ்வர்யா ராய் சல்மான் கானுடன் ஏன் பிரிந்தார் என்ற தனது அறிக்கையால் பி-டவுன் அதிர்ச்சியடைந்தபோது

சல்மான் கான் மற்றும் ஐஸ்வர்யா ராய்: 90களின் பிற்பகுதியில் பாலிவுட் மெகாஸ்டார் சல்மான் கான் மற்றும் ஐஸ்வர்யா ராயின் நெருக்கம் பரவலான கவனத்தைப் பெற்றது. ஹம் தில் தே சுகே சனம் திரைப்படத்தில் அவர்களின்

மேலும் படிக்க »
1679569875_photo.jpg

அவதூறு வழக்கில் தண்டிக்கப்பட்ட பிறகு மகாத்மா காந்தியை அழைத்தார் ராகுல் காந்தி; மக்களை அவமதிக்க சுதந்திரம் வேண்டும் என்று காங்கிரஸை பாஜக சாடுகிறது: முக்கிய புள்ளிகள் | இந்தியா செய்திகள்

புதுடில்லி: ‘மோடி குடும்பப்பெயர்’ எனக் கூறப்பட்டதாகக் கூறப்படும் 2019 கிரிமினல் அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு சூரத் மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. பின்னர் அவருக்கு நீதிமன்றம்

மேலும் படிக்க »
error: Content is protected !!
Scroll to Top