TamilMother

tamilmother.com_logo

தமிழ் தாய் வாழ்த்து

தமிழ் தாய்
தமிழ் தாய்

ஒரு 20 வருடங்களுக்கு முன்னால் அநேகமாக தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் ஒவ்வொரு நாளும் தமிழ் தாய் வாழ்த்துடன் தான் ஆரம்பமாகும்… அதென்ன 20 வருடங்கள் – இப்பொழுது இல்லையா என்கிற கேள்விக்கு — இப்பொழுது அரசு பள்ளிகளில் மற்றும் ஒரு சில தனியார் பள்ளிகளில் மட்டுமே பாட படுகின்றன என்பதருகிறேன் … மற்ற பள்ளிகளில் “நம் பாட்டன் முப்பாட்டன் பாடிய நம் கலாச்சாரம் பண்பாடு போற்றும் ஆங்கில பாடல்கள் தான்” !
தமிழக அரசால் போற்றப்படும் இந்த தமிழ் தாய் வாழ்த்தும் இதை எழுதியவர் தெய்வத்திரு.மனோன்மணியம் சுந்தரனார் என்பது அநேகம் பேருக்கு தெரிந்திருக்கும்…. இந்த பதிவில் எனக்கு தெரிந்த (படித்த) இந்த அறிய பாடல் பற்றி வேறு சில விவரங்களும் , இந்த பாடலின் பொருளையும் தங்களுடன் பகிரலாம் என்பது என் எண்ணம் — தெரிந்தவர்கள் பொருளிலோ தந்துள்ள விவரத்திலோ ஏதாவது விடு பட்டிருந்தால் / தவறாக கூற பட்டிருந்தால் தயவு கூர்ந்து தெரிவிக்கவும் .
தெய்வத்திரு . சுந்தரனார் அவர்கள் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்க்கு தொண்டாற்றிய பெரும் மேதைகளில் முக்கியமானவர். இவர் கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு திருஞானசம்பந்தர் காலவாராய்ச்சி செய்து வெளியிட்டார். பத்துப்பாட்டு பற்றிய திறனாய்வினை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். மனோன்மணியம் என்னும் நாடக நூல் – இவர் எழுதிய மிகப்பெரிய படைப்பாகும்.
இந்த மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் சில திருத்தங்களுடன் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜூன்1970 இல் அறிவிக்கப்பட்டது.
அனைவருக்கும் தெரிந்த அந்த பாடல் இதோ …அதன் பொருளும் தந்துள்ளேன் …
பாடல் :
~~~~~~
நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்
தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்க சிறு பிறைநுதலும் தரித்த நறும் திலகமுமே
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே ! தமிழணங்கே !
உன் சீர் இளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே !
வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே !
அறிஞர்களின் பொருள் :
~~~~~~~~~~~~~~~~~~~
நீர் நிறைந்த கடலெனும் ஆடையுடுத்திய நிலமெனும் பெண்ணுக்கு அழகு மிளிரும் சிறப்பு நிறைந்த முகமாக திகழ்கிற இந்தியக் கண்டத்தில் தென்னாடும் அதில் சிறந்த திராவிடர்களின் நல்ல திருநாடும் பொருத்தமான. பிறைபோன்ற நெற்றியாகவும் அதிலிட்ட மணம் வீசும் திலகமாகவும் இருக்கின்றன. அந்த திலகத்தில் இருந்து வரும் வாசனைபோல அனைத்துலகமும் இன்பம்பெறும் வகையில் எல்லாத்திசையிலும் புகழ் மணக்கும்படி இருந்த(இருக்கின்ற?) பெருமை மிக்க தமிழ்ப்பெண்ணே! தமிழ்ப்பெண்ணே!
இன்றும் இளமையாக இருக்கின்ற உன் சிறப்பானத் திறமையை வியந்து எங்கள் செயல்களை மறந்து உன்னை வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே!
எளியவார்த்தையில் :
~~~~~~~~~~~~~~~~~~
அதாவது — இந்த அழகான பூமிப் பெண்ணிற்கு பரந்த இந்த கடல் தான் ஆடை …பாரத நாடே அவளின் முகம் …தென்திசை அதன் நெற்றியாம்…. அதில் திலகமென திகழ்வது திராவிட திருநாடாம் …அந்தத் திலகத்தின் வாசனைப் போல் அனைத்து உலகமும் இன்பம் காண எல்லா திசையிலும் புகழ் மணக்க இருக்கும் தெய்வமகள் ஆகிய தமிழே என்றென்றும் இளமையாக இருக்கிற உன்னுடைய இந்த அழகைக் கண்டு வியந்து,செய்யும் செயலையும் மறந்து வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம்.
இன்னொரு செய்தி ….
தமிழ் மொழியையே ஆட்சி மொழியாக கொண்ட மற்றொரு மாநிலமான புதுச்சேரியில் – புதுச்சேரி அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ் வாழ்த்துப்பாடலை எழுதியவர், தமிழ் உலகுக்கு பெரும் தொண்டாற்றிய தெய்வத்திரு. பாரதிதாசன்…இதோ அந்த பாடல் .. பாடலே எளிய முறையில் இருப்பதால் பொருள் தனியாக தேவையில்லை … இந்த பாடல் தான் புதுவையில் உள்ள அரசு பள்ளிகளில் பாட படுகிறது ( நான் என்னுடைய +1, +2 புதுவை மாநிலம்- காரைக்கால் தந்தை பெரியார் அரசு மேல் நிலை பள்ளியில் படித்தேன் ..இந்த பாடல் தான் காலை வணக்க கூட்டத்தில் பாட படும் )
வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே!
மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே!
வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே
வீரனின் வீரமும், வெற்றியும் நீயே!
தாழ்ந்திடு நிலையினில் உனை விடுப்பேனோ?
தமிழன்எந் நாளும் தலைகுனி வேனோ?
சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய்
தோன்றுடல் நீஉயிர் நான்மறப் பேனோ?
செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!
செயலினை மூச்சினை உனக்களித்தேனே!
நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே!
முந்திய நாளினில் அறிவும் இலாது
மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது
செந்தாமரைக் காடு பூத்தது போலே
செழித்தஎன் தமிழே ஒளியே வாழி!
கடைசியாக …
இப்படி எத்தனை எத்தனையோ பாடல்கள் படைப்புகள் நம் மொழியில் ஒன்றன கலந்துள்ளன – அவைகளை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்து சென்றாலே அது இந்த தமிழ் அன்னைக்கு பெரும் தொண்டாகும் ….. 100 கோடியில் சிலை வைப்பதை விட !

Zydus Lifesciences USFDA க்கு பொதுவான மருந்து, ஹெல்த் நியூஸ், ET ஹெல்த் வேர்ல்ட் சந்தைப்படுத்த ஒப்புதல்

புதுடெல்லி: மைக்செடிமா கோமாவுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படும் ஒரு பொதுவான தயாரிப்பை சந்தைப்படுத்த அமெரிக்க சுகாதார கட்டுப்பாட்டாளரிடம் இருந்து அனுமதி பெற்றுள்ளதாக சைடஸ் லைஃப் சயின்சஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. 100 mcg/vial, 200 mcg/vial மற்றும்

மேலும் படிக்க »
1680014882_photo.jpg

ஆண்ட்ராய்டு: வாட்ஸ்அப் விரைவில் ஆண்ட்ராய்டில் புதிய ஆடியோ அரட்டை அம்சத்தைப் பெறலாம்: அது என்ன

மெட்டாவுக்குச் சொந்தமான உடனடி செய்தியிடல் பயன்பாடு பகிரி பயனர் அனுபவத்தை மேம்படுத்த புதிய அம்சங்களைச் சேர்த்துக் கொண்டே இருக்கிறது. நிறுவனம் ஒரு புதிய அம்சத்தை பீட்டா சோதனை செய்வதாக கூறப்படுகிறது. கூகுள் பிளே பீட்டா

மேலும் படிக்க »
1680014721_photo.jpg

DU மகளிர் கல்லூரி மாணவிகள் விழாவின் போது துன்புறுத்தப்பட்டதாக குற்றம் சாட்டுகின்றனர், ஆண்கள் சுவர்களை அளந்ததாக கூறுகின்றனர் | டெல்லி செய்திகள்

புதுடெல்லி: மாணவர்கள் பெண்களுக்கான இந்திரபிரஸ்தா கல்லூரி தில்லி பல்கலைக்கழகத்தில், செவ்வாய்கிழமை ஒரு விழாவின் போது, ​​பலர் கல்வி நிறுவனத்தின் எல்லைச் சுவர்களில் ஏறி, பல மாணவர்களை துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.இச்சம்பவம் குறித்து கல்லூரி அதிகாரிகளிடமிருந்தோ, காவல்துறை

மேலும் படிக்க »
1680014206_photo.jpg

Bjp: ‘2 முதல் 303 இடங்கள் வரை’: பாஜகவின் பயணத்தை பிரதமர் மோடி விவரித்தார் | இந்தியா செய்திகள்

புதுடெல்லி: டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்பு வளாகம் மற்றும் ஆடிட்டோரியத்தை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார். காவி கட்சி கடந்த நான்கு தசாப்தங்களாக.தொடக்க விழாவில் பேசிய பி.எம்

மேலும் படிக்க »
1680013884_photo.jpg

டிஸ்னி அதன் முழு மெட்டாவர்ஸ் குழுவையும் நீக்குகிறது

நிறுவப்பட்ட ஒரு வருடம் கழித்து, டிஸ்னி முழுவதுமாக பதவி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது மெட்டாவர்ஸ் தற்போதைய மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக பிரிவு, வாஷிங்டன் ஜர்னல் அறிக்கை செய்கிறது. மூத்த வீரர் மைக் ஒயிட் தலைமையிலான

மேலும் படிக்க »
delhi-high-court-pti_d.jpg

காஷ்மீர் பிஸ்மேன் ஜாகூர் வதாலியின் மனுவுக்கு பதிலளிக்குமாறு என்ஐஏவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தி டெல்லி உயர் நீதிமன்றம் காஷ்மீர் தொழிலதிபர் ஜாகூர் அஹ்மத் ஷா வதாலி, பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்த வழக்கில் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீது செவ்வாயன்று என்ஐஏ

மேலும் படிக்க »
error: Content is protected !!
Scroll to Top