TamilMother

tamilmother.com_logo

தாலி காட்டி 5 நிமிஷம் தான்.. மாப்பிள்ளையை உற்றுப் பார்த்தால்? ஷாக்கான மணப்பெண்! முறிந்த பந்தம்!

thirumanam

திருப்பூர் : திருப்பூரில் திருமணமான சில நிமிடங்களிலேயே தாலி கட்டிய மணமகனை வேண்டாம் என மணப்பெண் மறுத்த நிலையில் இருவரும் உடனடியாக பிரிந்து சென்ற சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி இருக்கிறது.

திருமணத்திற்கு முன்பு நின்று போகும் பல திருமணங்களை பார்த்திருப்போம். ஏதாவது ஒரு காரணம் இருக்கும் பட்சத்தில் பேச்சுவார்த்தையின் போது போன திருமணங்கள் நின்று போயிருக்கின்றன.

திருமணத்திற்குப் பிறகு கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ கருத்து வேறுபாடு ஏற்பட்டு திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வோம் என பெற்றோர்கள் முன்னிலையில் அல்லது நீதிமன்றத்தின் முன்னிலையில் இருந்து மணவாழ்க்கையை முறித்துக் கொள்ளும் சம்பவங்களும் நம்மை சுற்றி நடைபெற்று தான் வருகிறது.

ஆனால் திருப்பூரில் நடந்திருக்கும் இந்த சம்பவம் முற்றிலும் வேறானது. காரணம் தாலி கட்டிய ஐந்து நிமிடங்களை தம்பதிகள் இருவரும் பிரிவதாக அறிவித்திருப்பது தான் தற்போது சமூக வலைதளங்களில் கடும் விவாதங்களை ஏற்படுத்தி இருக்கிறது. திருப்பூர் மாவட்டம் பிஎன் ரோடு பகுதியில் 32 வயதான இளைஞர் ஒருவருக்கும் 25 வயதான பெண் ஒருவருக்கும் இடையே திருமணம் செய்ய பெற்றோர்கள் ஏற்பாடு செய்தனர். திருமணத்திற்காக சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு இருந்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.

வரவேற்பு நிகழ்ச்சி பத்திரிக்கை அடித்து உறவினர்கள் அனைவருக்கும் கொடுத்து திருமணத்திற்கு பெற்றோர் அழைத்து இருந்தனர். நேற்று காலை திருமணத்திற்கான ஏற்பாடுகள் 100% நிறைவடைந்த நிலையில் உறவினர்கள் அனைவரும் வந்திருந்தனர். வழக்கமான சம்பிரதாயங்களின் படி கோவிலில் பூஜைகள் செய்யப்பட்ட பின் மணமக்கள் இருவரும் மாலை மாற்றி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் திருப்பூர் பூலுவா பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இரு தரப்பு உறவினர்களும் கலந்து கொண்ட நிலையில் அப்போது மணப்பெண் மணமகனின் காலை பார்த்துள்ளார். இரண்டு கால்களில் ஒருகால் லேசாக வளைந்து இருப்பதைக் கண்ட அவர் இதுகுறித்து மணமகனிடம் கேட்டுள்ளார். அப்போது ஒரு விபத்தில் அடிபட்டதன் காரணமாக அறுவை சிகிச்சை செய்ததால் கால் அப்படி இருப்பதாக கூறியிருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகள் தன்னிடம் ஏன் இதை முன்னரே கூறவில்லை எனக் கூறி தன்னை ஏமாற்றி விட்டீர்கள் எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை எனக் கூறியுள்ளார்.


இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் உறவினர்கள் அனைவரும் சமாதானம் செய்ய முயன்றனர். ஆனாலும் இந்த விவகாரம் கொங்கு நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்றது. மணமகள் மணமகன் மற்றும் இரு தரப்பு உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். காலில் அறுவை சிகிச்சை செய்ததை மறைத்து திருமணம் செய்ததாக மனமகளும் அவர்களுடைய பெற்றோரும் குற்றம் சாட்டினர் .மேலும் மணமகன் வேலைக்குச் செல்ல மாட்டார் என்பதால் தனக்கு திருமணம் வேண்டாம் என மணமகள் அடம் பிடித்தார். இதை அடுத்து இருவரும் மண பந்தத்தில் இருந்து பிரிந்து கொள்வதாக ஒப்புக்கொண்டனர். திருமணமான சில நிமிடங்களில் மனமேடையில் மணமகனை மணமகள் வேண்டாம் என சொல்லிச் சென்ற சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

March28-pawar_d.jpg

சரத் ​​பவார் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்: வீர் சாவர்க்கரின் பேரன்

வீர் சாவர்க்கரின் பேரன், ரஞ்சித் சாவர்க்கர் செவ்வாயன்று, வீர் சாவர்க்கரைப் பற்றி ராகுல் காந்தியின் கருத்துக்காக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப் போவதாகவும், என்சிபி தலைவர் சரத் பவார் காங்கிரஸ் தலைவர் மன்னிப்பு கேட்க வேண்டும்

மேலும் படிக்க »
99068323.jpg

நிக் ஜோனாஸ் தனது டிஎம்மில் சறுக்கியபோது, ​​’நீண்ட தீவிர உறவில்’ இருந்ததாக பிரியங்கா சோப்ரா வெளிப்படுத்தினார் | இந்தி திரைப்பட செய்திகள்

பிரியங்கா சோப்ரா தனது காதல் வாழ்க்கையைப் பற்றி வெளிப்படையாகக் கூறுகிறார், ஆனால் இந்த நேரத்தில், அவர் நிக் ஜோனாஸை திருமணம் செய்துகொள்வதற்கு முன்பு ஒரு மர்ம மனிதனுடன் தனது காதல் பற்றி பீன்ஸ் கொட்டுகிறார்.

மேலும் படிக்க »
IMG_NPCI-set-to-lau_GJV9_2_1_JNAQ6ASU.jpg

PPIகள் வழியாக UPI பரிவர்த்தனைகளில் பரிமாற்றம் – இதன் பொருள் என்ன?

ஏப்ரல் 1 முதல் ப்ரீபெய்டு பேமெண்ட் கருவிகளைப் பயன்படுத்தி செய்யப்படும் வணிகர் UPI பரிவர்த்தனைகளுக்கு 1.1 சதவீதம் வரை பரிமாற்றக் கட்டணத்தை இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) அறிமுகப்படுத்தியுள்ளது. MCC (வணிக வகை

மேலும் படிக்க »
1680017872_photo.jpg

ஜூம்: ஜூம், ChatGPT-maker OpenAI ஆனது AI அம்சங்களை அதன் ஸ்மார்ட் துணைக்குக் கொண்டு வருகிறது

தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் ‘ஸ்மார்ட் தோழர்களை’ இணைக்க செயற்கை நுண்ணறிவு (AI) அலைவரிசையில் குதிக்கும் நேரத்தில், வீடியோ கான்பரன்சிங் தளம் பெரிதாக்கு பயன்பாட்டில் AI இன் பயன்பாட்டை விரிவுபடுத்துவதாகவும் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க »
99068462.jpg

Matt Damon மைக்கேல் ஜோர்டான் திரைப்படம், AIR இன் பிரீமியரில் மகள்களுடன் ஒரு அரிய பொது தோற்றத்தில் தோன்றினார் | ஆங்கில திரைப்பட செய்திகள்

AIR திரையிடலில் மாட் டாமன் தனது மூன்று மகள்களுடன் ஒரு அரிய பொது தோற்றத்தில் தோன்றினார். தனது குடும்ப வாழ்க்கையை தனிப்பட்ட முறையில் வைத்திருப்பதற்காக அறியப்பட்ட மாட், தனது மூன்று மகள்களுடன் பொது வெளியில்

மேலும் படிக்க »
Tata-Capital.jpg

டாடா கேபிட்டல் ஃபைனான்சியல் சர்வீசஸ், டாடா கிளீன்டெக் ஆகியவை டாடா கேபிட்டலுடன் இணைகின்றன.

Tata Capital Financial Services மற்றும் Tata Cleantech Capital ஆகியவை அவற்றின் தாய் நிறுவனமான Tata Capital உடன் இணைக்கப்படும் என்று Tata Capital Financial Services இன் பங்குச் சந்தை தாக்கல்

மேலும் படிக்க »
error: Content is protected !!
Scroll to Top