TamilMother

tamilmother.com_logo

தொடர்ந்து பெய்யும் மழையால் வெள்ளத்தில் மிதக்கும் சென்னை

தொடர்ந்து பெய்யும் மழையால் வெள்ளத்தில் மிதக்கும் சென்னை

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து நீடிப்பதால் தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை மற்றும் அதை சுற்றிய கடலோர மாவட்டங்களில் நேற்று முதல் மீண்டும் கனமழை துவங்கியுள்ளது.
சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர்,விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநிலக்கல்லூரி, அண்ணாபல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
சென்னை நகரில் நேற்று பிற்பகலில் தொடங்கிய கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.
திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மயிலாப்பூர் அம்பத்தூர், ஆவடி, பல்லாவரம், உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
சென்னை குரோம்பேட்டை பகுதியில் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் ஒரு அடி உயரத்திற்கு வெள்ளம் போல் மழை நீர் ஓடுகிறது. சானடோரியம் ரயில் நிலைய சுரங்கப்பாதையும் மழைநீரில் மூழ்கியது.
இதனால் ரயில் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
மேலும், கிழக்கு தாம்பரம், முடிச்சூர் சாலையிலும் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது.
தொடரும் கனமழையால் கிண்டி, வடபழனி, சைதாப்பேட்டை, அடையாறு, திருவான்மியூர், மயிலாப்பூர், பட்டினம்பாக்கம், அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.
சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், செங்குன்றம், குழல், குளத்தூர், மாதவரம், ராஜமங்கலம், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளும் கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
வேளச்சேரி,முடிச்சூர் பகுதிகளில் கிருஷ்ணா நகர் பாரதி நகர் ,மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து உள்ளது.
செங்குன்றத்தில் கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. அதேப்போன்று முகப்பேர் மேற்கிலும் இன்று காலை மின்சாரம் துண்டிக்கப்பட்டது
மழை காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் திகதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநிலக் கல்லூரியில் இன்று நடைபெறவிருந்த தேர்வு வரும் 16ம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார்.
அதிகாலையில் இருந்து கனமழை கொட்டி வருவதால், அலுவலகம் செல்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சென்னையில் வருகின்ற 8ம் திகதி வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

98939581.jpg

பெருங்குடல் புற்றுநோய் அறிகுறிகள்: இந்தியாவில் பெருங்குடல் புற்றுநோய் வழக்குகள் அதிகரித்து வருவதால், இந்த ஆரம்ப அறிகுறிகளைத் தவறவிடாதீர்கள்

புற்றுநோய், நாம் அனைவரும் அறிந்தபடி, உலகளவில் மரணத்திற்கு இரண்டாவது முக்கிய காரணமாகும். மார்ச் மாதம் பெருங்குடல் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. எந்தவொரு புற்றுநோய்க்கும் வரும்போது ஆரம்பகால நோயறிதலைப் பெறுவது மிகவும் முக்கியமானது, ஆனால்

மேலும் படிக்க »
lupin-receives-tentative-usfda-approval-for-obeticholic-acid-tablets.jpg

லூபின் ஒபிடிகோலிக் அமில மாத்திரைகள், ஹெல்த் நியூஸ், ET ஹெல்த் வேர்ல்ட் ஆகியவற்றிற்கான தற்காலிக யுஎஸ்எஃப்டிஏ ஒப்புதலைப் பெறுகிறது

2014-க்கு முன் 387 ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகள் தற்போது 660 ஆக 71 சதவீதம் உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளது. 2014 இல் 51,348 இடங்கள் இருந்த நிலையில்

மேலும் படிக்க »
129092940_gettyimages-1469489996.jpg

ஆரோன் சோர்கின் தனக்கு பக்கவாதம் ஏற்பட்டதை வெளிப்படுத்துகிறார்: ‘இது ஒரு உரத்த விழிப்பு அழைப்பு’

வெஸ்ட் விங் உருவாக்கியவர் பயத்தை “ஒரு உரத்த விழிப்பு அழைப்பு” என்று விவரிக்கிறார், ஆனால் அவர் இப்போது “நன்றாக இருக்கிறார்” என்று கூறுகிறார்.

மேலும் படிக்க »
1679573083_photo.jpg

‘ராகுல் டிராவிட்டிற்கு எனது சேவையை வழங்கினேன் ஆனால் அவர் கூறினார்…’: லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் | கிரிக்கெட் செய்திகள்

புதுடெல்லி: இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வாழ்நாள் முழுவதும் ஜென்டில்மேன் மற்றும் விளையாடும் நாட்களில் மிகவும் விரும்பப்பட்ட கிரிக்கெட் வீரராக இருந்துள்ளார். முன்னாள் இந்திய லெக் ஸ்பின்னர் மற்றும் தற்போது வர்ணனையாளராக உள்ளார்

மேலும் படிக்க »
1679572997_photo.jpg

இந்த கோடையின் பிற்பகுதியில் Counter-Strike 2 வருகிறது, CS:GO க்கு இலவச மேம்படுத்தல்

மிகுந்த எதிர்பார்ப்புக்கு பிறகு, அடைப்பான் அறிவித்துள்ளது எதிர் வேலைநிறுத்தம் 2, புதிய சோர்ஸ் 2 இன்ஜினில் கட்டப்பட்டது. தற்போது வரையறுக்கப்பட்ட சோதனையாக மட்டுமே கிடைக்கிறது, CS 2 இந்த ஆண்டின் இறுதியில் வரும்.வரவிருக்கும் தொடர்ச்சியின்

மேலும் படிக்க »
ArmyindianrepreISTOCK_d.jpg

சத்தீஸ்கர்: பாதுகாப்புப் படையினருடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்ட 5 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்

சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 5 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டனர் சத்தீஸ்கர் வியாழக்கிழமை, மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எர்ரபோர் பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கொத்தலேந்திரா கிராமத்தின் காட்டில்

மேலும் படிக்க »
error: Content is protected !!
Scroll to Top