TamilMother

tamilmother.com_logo

முக்கிய ஆயுதத்தை கையில் எடுக்கும் சசிகலா?.. கை கோர்த்த தினகரன்.. அதிமுகவுக்கு நெருக்கடி?

ttv-sasikala

முக்கிய ஆயுதத்தை கையில் எடுக்கும் சசிகலா?.. கை கோர்த்த தினகரன்.. அதிமுகவுக்கு நெருக்கடி?
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் இல்லாமல் கூடிய பொதுக் குழுக் கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்கும் நடவடிக்கையில் சசிகலா ஈடுபட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுக பொதுக் குழு கூட்டம் கூடி சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்தது. இதையடுத்து அதற்கான கோப்புகளையும் அவரது வீட்டுக்கே சென்று அவரிடம் மூத்த நிர்வாகிகள் ஒப்படைத்தனர். இதையடுத்து சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றவுடன் கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக பெயரில் பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர், துணை பொதுச் செயலாளர் ஆகிய பதவிகளை நீக்கிய அதிமுக நிர்வாகிகள், புதிதாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளை உருவாக்கினர். ஹைகோர்ட் இந்த கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை ஹைகோர்ட்டில் சசிகலாவும் டிடிவி தினகரனும் வழக்கு தொடர்ந்தனர். அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா உள்ள நிலையில் கட்சி விரோதமான செயல்பாடுகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வமும் அவருடன் இருந்த அமைச்சர்களும் நிர்வாகிகள் மேற்கொண்டதாக சசிகலாவும், டிடிவி தினகரனும் குற்றம்சாட்டியிருந்தார்கள். பொருளாளர் அவைத் தலைவராக மதுசூதனன், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் நியமிக்கப்பட்டதும் செல்லாது என அறிவிக்கக் கோரியும் வாதிட்டனர். அது போல் பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்க வேண்டும். அது போல் கட்சியின் பொதுச் செயலாளர், துணை பொதுச் செயலாளர் ஆகிய பதவிகளிலிருந்து தங்களை நீக்கியது செல்லாது என அறிவிக்கக் கோரினர். ஆவணங்கள் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கட்சி தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அதிமுக தலைமைக் கழகம் ஹைகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இந்த வழக்கில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

ஆவணங்கள் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கட்சி தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அதிமுக தலைமைக் கழகம் ஹைகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இந்த வழக்கில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. அக்ரஹார சிறை தற்போது சசிகலா பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து விடுதலையாகிவிட்டார். அவர் நாளை மறுநாள் சென்னை வருகிறார். அவர் அதிமுக பொதுச் செயலாளர் என்ற உரிமையுடன் விக்டோரியா மருத்துவமனையிலிருந்து பண்ணை வீட்டிற்கு சென்ற போது காரில் அதிமுக கொடியை பயன்படுத்தியிருந்தார். அரசியல் செய்திகள் தமுமுக மனிதநேய மக்கள் கட்சி புதிய நீதிக் கட்சி விடுதலைச் சிறுத்தைகள் புதிய தமிழகம் பகுஜன் சமாஜ் கட்சி மக்கள் நீதி மய்யம் மனிதநேய ஜனநாயகக் கட்சி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி எஸ்டிபிஐ சமத்துவ மக்கள் கட்சி நாம் தமிழர் கட்சி பாமக தமிழக வாழ்வுரிமைக் கட்சி மதிமுக அதிமுக திமுக காங்கிரஸ் பாஜக தமாகா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆம் ஆத்மி தமுமுக மனிதநேய மக்கள் கட்சி புதிய நீதிக் கட்சி விடுதலைச் சிறுத்தைகள் புதிய தமிழகம் பகுஜன் சமாஜ் கட்சி மக்கள் நீதி மய்யம் மனிதநேய ஜனநாயகக் கட்சி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி எஸ்டிபிஐ சமத்துவ மக்கள் கட்சி நாம் தமிழர் கட்சி பாமக தமிழக வாழ்வுரிமைக் கட்சி மதிமுக அதிமுக திமுக காங்கிரஸ் பாஜக தமாகா PrevNext அதிமுகவுக்கு நெருக்கடி தற்போது நாளை மறுநாள் தமிழகத்திற்கு வருகை தரும் சசிகலா தனது காரில் நிச்சயம் அதிமுக கொடியுடனே வருவார் என சொல்லப்படுகிறது. எனவே இந்த வழக்கை மீண்டும் தூசி தட்டி விசாரிக்க சசிகலாவும் தினகரனும் யோசித்து வருகிறார்களாம். இன்னும் சில மாதங்களில் தேர்தல் வரும் நிலையில் இந்த வழக்கால் அதிமுகவுக்கு நெருக்கடி ஏற்படலாம் என தெரிகிறது. 42

March28-c_d.jpg

பங்களாவை காலி செய்யுமாறு ராகுல் கூறியதையடுத்து, மத்திய அரசை கார்கே கடுமையாக சாடியுள்ளார்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே செவ்வாயன்று ராகுல் காந்தி தனது அதிகாரப்பூர்வ பங்களாவை காலி செய்யும்படி மத்திய அரசை கடுமையாக சாடினார், கட்சியின் முன்னாள் தலைவரை “அச்சுறுத்தும், பயமுறுத்தும் மற்றும் அவமானப்படுத்தும்” அரசாங்கத்தின் அணுகுமுறையை

மேலும் படிக்க »
374664213_0-15.jpg

PPIகள் மூலம் ₹2,000க்கு மேல் UPI பரிவர்த்தனைகளுக்கு 1.1% பரிமாற்றக் கட்டணத்தை NPCI பரிந்துரைக்கிறது

ப்ரீபெய்ட் பேமெண்ட் கருவிகள் (பிபிஐக்கள்)-வாலட்கள் அல்லது கார்டுகளைப் பயன்படுத்தி செய்யப்படும் வணிகர் யுபிஐ (யுனிஃபைட் பேமென்ட்ஸ் இன்டர்ஃபேஸ்) பரிவர்த்தனைகளுக்கு 1.1 சதவீதம் வரை பரிமாற்றக் கட்டணம் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என்று

மேலும் படிக்க »
1680016129_photo.jpg

முதன்முதலில், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் ஜாமீன் மனுவை முடிவு செய்யும் போது ChatGPT ஐப் பயன்படுத்துகிறது | சண்டிகர் செய்திகள்

சண்டிகர்: முதல் முறையாக, தி பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் உதவியை நாடினார் ChatGPT, AI சாட்போட்ஒரு ஜாமீன் வழக்கை தீர்மானிக்கும் போது, ​​அதில் குற்றம் சாட்டப்பட்டவர் ஜாமீன் கோரி அதை அணுகினார்

மேலும் படிக்க »
99054448.jpg

நடிகர் விக்ரமன் நாயர் காலமானார்

பிரபல நடிகரும் நாடக ஆசிரியருமான விக்ரமன் நாயர் மார்ச் 27 திங்கட்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 78. செய்திகளின்படி, விக்ரமன் நாயர் முதுமை தொடர்பான நோயால் கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறிது

மேலும் படிக்க »
128888848_gettyimages-1240021558.jpg

Gary Lineker £4.9m வரி பில் மேல் முறையீட்டை வென்றார்

“எனது முடிவுகளின் விளைவு என்னவென்றால், BBC மற்றும் Mr Lineker மற்றும் BT Sport மற்றும் Mr Lineker இடையே நேரடி ஒப்பந்தங்கள் இருந்ததால், இடைத்தரகர்கள் சட்டம் (IR35) சட்டத்தின்படி பொருந்தாது மற்றும் பொருந்தாது”

மேலும் படிக்க »
Rahul-Gandhi-latest-PTI_d_d.jpg

‘எனது உரிமைகளுக்கு பாதகம் ஏற்படாமல்’ வெளியேற்ற அறிவிப்புக்கு கட்டுப்படுவேன்: ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செவ்வாயன்று தனது அதிகாரப்பூர்வ பங்களாவை காலி செய்யுமாறு லோக்சபா செயலகத்தின் நோட்டீசுக்கு பதிலளித்தார், மேலும் அவரது கட்சித் தலைவர்கள் அரசாங்கத்தை அவமானப்படுத்தியதாகக் குற்றம் சாட்டியபோதும், வெளியேற்ற நோட்டீஸுக்குக் கட்டுப்படுவேன்

மேலும் படிக்க »
error: Content is protected !!
Scroll to Top