முக்கிய ஆயுதத்தை கையில் எடுக்கும் சசிகலா?.. கை கோர்த்த தினகரன்.. அதிமுகவுக்கு நெருக்கடி?
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் இல்லாமல் கூடிய பொதுக் குழுக் கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்கும் நடவடிக்கையில் சசிகலா ஈடுபட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுக பொதுக் குழு கூட்டம் கூடி சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்தது. இதையடுத்து அதற்கான கோப்புகளையும் அவரது வீட்டுக்கே சென்று அவரிடம் மூத்த நிர்வாகிகள் ஒப்படைத்தனர். இதையடுத்து சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றவுடன் கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக பெயரில் பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர், துணை பொதுச் செயலாளர் ஆகிய பதவிகளை நீக்கிய அதிமுக நிர்வாகிகள், புதிதாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளை உருவாக்கினர். ஹைகோர்ட் இந்த கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை ஹைகோர்ட்டில் சசிகலாவும் டிடிவி தினகரனும் வழக்கு தொடர்ந்தனர். அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா உள்ள நிலையில் கட்சி விரோதமான செயல்பாடுகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வமும் அவருடன் இருந்த அமைச்சர்களும் நிர்வாகிகள் மேற்கொண்டதாக சசிகலாவும், டிடிவி தினகரனும் குற்றம்சாட்டியிருந்தார்கள். பொருளாளர் அவைத் தலைவராக மதுசூதனன், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் நியமிக்கப்பட்டதும் செல்லாது என அறிவிக்கக் கோரியும் வாதிட்டனர். அது
போல் பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்க வேண்டும். அது போல் கட்சியின் பொதுச் செயலாளர், துணை பொதுச் செயலாளர் ஆகிய பதவிகளிலிருந்து தங்களை நீக்கியது செல்லாது என அறிவிக்கக் கோரினர். ஆவணங்கள் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கட்சி தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அதிமுக தலைமைக் கழகம் ஹைகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இந்த வழக்கில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
ஆவணங்கள் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கட்சி தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அதிமுக தலைமைக் கழகம் ஹைகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இந்த வழக்கில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. அக்ரஹார சிறை தற்போது சசிகலா பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து விடுதலையாகிவிட்டார். அவர் நாளை மறுநாள் சென்னை வருகிறார். அவர் அதிமுக பொதுச் செயலாளர் என்ற உரிமையுடன் விக்டோரியா மருத்துவமனையிலிருந்து பண்ணை வீட்டிற்கு சென்ற போது காரில் அதிமுக கொடியை பயன்படுத்தியிருந்தார். அரசியல் செய்திகள் தமுமுக மனிதநேய மக்கள் கட்சி புதிய நீதிக் கட்சி விடுதலைச் சிறுத்தைகள் புதிய தமிழகம் பகுஜன் சமாஜ் கட்சி மக்கள் நீதி மய்யம் மனிதநேய ஜனநாயகக் கட்சி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி எஸ்டிபிஐ சமத்துவ மக்கள் கட்சி நாம் தமிழர் கட்சி பாமக தமிழக வாழ்வுரிமைக் கட்சி மதிமுக அதிமுக திமுக காங்கிரஸ் பாஜக தமாகா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆம் ஆத்மி தமுமுக மனிதநேய மக்கள் கட்சி புதிய நீதிக் கட்சி விடுதலைச் சிறுத்தைகள் புதிய தமிழகம் பகுஜன் சமாஜ் கட்சி மக்கள் நீதி மய்யம் மனிதநேய ஜனநாயகக் கட்சி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி எஸ்டிபிஐ சமத்துவ மக்கள் கட்சி நாம் தமிழர் கட்சி பாமக தமிழக வாழ்வுரிமைக் கட்சி மதிமுக அதிமுக திமுக காங்கிரஸ் பாஜக தமாகா PrevNext அதிமுகவுக்கு நெருக்கடி தற்போது நாளை மறுநாள் தமிழகத்திற்கு வருகை தரும் சசிகலா தனது காரில் நிச்சயம் அதிமுக கொடியுடனே வருவார் என சொல்லப்படுகிறது. எனவே இந்த வழக்கை மீண்டும் தூசி தட்டி விசாரிக்க சசிகலாவும் தினகரனும் யோசித்து வருகிறார்களாம். இன்னும் சில மாதங்களில் தேர்தல் வரும் நிலையில் இந்த வழக்கால் அதிமுகவுக்கு நெருக்கடி ஏற்படலாம் என தெரிகிறது. 42

பங்களாவை காலி செய்யுமாறு ராகுல் கூறியதையடுத்து, மத்திய அரசை கார்கே கடுமையாக சாடியுள்ளார்
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே செவ்வாயன்று ராகுல் காந்தி தனது அதிகாரப்பூர்வ பங்களாவை காலி செய்யும்படி மத்திய அரசை கடுமையாக சாடினார், கட்சியின் முன்னாள் தலைவரை “அச்சுறுத்தும், பயமுறுத்தும் மற்றும் அவமானப்படுத்தும்” அரசாங்கத்தின் அணுகுமுறையை