TamilMother

tamilmother.com_logo

விவசாயிகள் போராட்டத்தில்… இந்திய அரசு செமையா செயல்படுதுங்க… அப்படியே பல்டியடித்த கனடா பிரதமர்

justin-trudeau-

விவசாயிகள் போராட்டத்தில்… இந்திய அரசு செமையா செயல்படுதுங்க… அப்படியே பல்டியடித்த கனடா பிரதமர்
டெல்லி: விவசாயிகள் போராட்டத்தில் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண முடிவெடுத்து செயல்படும் மத்திய அரசுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பாராட்டு தெரிவித்துள்ளார். காலிஸ்தான் பிரிவினைவாதிகளிடமிருந்து கனடாவில் உள்ள இந்தியர்களையும், அமைச்சக ஊழியர்களுக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும் என பிரதமர்

மோடியிடம் அவர் உறுதி அளித்தார்

சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் கவலை அளிக்கிறது. கனடா விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கும் என்று ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. விவசாயிகள் போராட்டம் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் 70 நாள்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு அவர்களுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டது. ஆனால் எதிலும் நல்ல முடிவு கிடைக்கவில்லை. குவியும் ஆதரவு இதற்க்கிடையே குடியரசு தினம் அன்று டெல்லியில் நடந்த பேரணி திசைமாறியது. பல விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தன.இதனால் விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். டெல்லியே பதற்றமானது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய பலரையும் போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு பிறகு விவசாயிகளுக்கு ஆதரவாக இந்தியாவில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பலர் குரல் கொடுத்து வருகின்றனர். ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு இந்தியாவின் பிரச்சினைகளில் வெளி ஆட்கள் தலையிடக் கூடாது என்று சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பிரபலங்கள் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சில மாதங்களுக்கு முன்பு இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்தார்.இந்தியாவில் போராட்டம் நடந்து வரும் செய்தி கவலை அளிக்கிறது. ஜனநாயக நாட்டில் யாருக்கும் போராட உரிமை உண்டு. கனடா அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் என்று ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்து இருந்தார். இந்திய வெளியுறவு அமைச்சகம் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. யூ-டர்ன் அடித்த கனடா பிரதமர் இந்த நிலையில் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக இந்திய அரசை பாராட்டி பேசிய ஜஸ்டின் ட்ரூடோ அப்படியே யூ-டர்ன் அடித்துள்ளார்.சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசிய கனடா பிரதமர் விவசாயிகள் போராட்டம், கொரோனா பரவல் உள்ளிட்ட முக்கியத்துவம் கொண்ட விவகாரங்கள் தொடர்பாக பேசியிருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசுக்கு பாராட்டு இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா நிருபர்களிடம் கூறியதாவது:- விவசாயிகள் போராட்டத்தில் கலந்து அப்போராட்டத்தை திசைதிருப்பியதாக மத்திய அரசு சுட்டிக்காட்டும் காலிஸ்தான் பிரிவினைவாதிகளிடமிருந்து கனடாவில் உள்ள இந்தியர்களையும், அமைச்சக ஊழியர்களுக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும் என பிரதமர் மோடியிடம், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதி அளித்துள்ளார். அப்போது விவசாயிகள் போராட்டத்தில் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண முடிவெடுத்து செயல்படும் இந்திய அரசுக்கு கனடா பிரதமர் பாராட்டு தெரிவித்தார் என்றார்.

106901172-1624474214482-106901172-1624408705315-gettyimages-491551484-MS_WINDOWS_10.jpg

மைக்ரோசாப்ட் பாதுகாப்பு கோபிலட்டை தனிப்பட்ட முன்னோட்டத்தில் அறிமுகப்படுத்துகிறது

அக்டோபர் 6, 2015 அன்று நியூயார்க்கில் நடந்த Windows 10 சாதனங்கள் நிகழ்வின் போது மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷனின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா பேசுகிறார். மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் தனது முதல் லேப்டாப், மூன்று

மேலும் படிக்க »
1680019272_photo.jpg

ஜம்மு-காஷ்மீரின் சம்பாவில் போதைப்பொருள் மற்றும் கால்நடை கடத்தல்காரர்கள் 8 பேர் கைது | ஜம்மு செய்திகள்

ஜம்மு: போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் மாடு கடத்தல்காரர்களுக்கு எதிரான இயக்கத்தைத் தொடர்ந்து, எஸ்.எஸ்.பி சம்பா பெனாம் தோஷ் வழிகாட்டுதலின் கீழ் சம்பா போலீசார் ஒரு பெரிய வெற்றியாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நாகா சோதனையின்

மேலும் படிக்க »
99068275.cms_.jpeg

20 ஆண்டுகள் மற்றும் எண்ணிக்கை: தெலுங்கு திரையுலகில் அல்லு அர்ஜுனின் எழுச்சியூட்டும் பயணம்

கருத்துகள் () வகைபடுத்து: புதியதுமேல் வாக்களிக்கப்பட்டதுபழமையானவிவாதிக்கப்பட்டதுகீழ் வாக்களிக்கப்பட்டது நெருக்கமான கருத்துக்கள் எண்ணிக்கை: 3000 உடன் உள்நுழையவும் முகநூல்கூகிள்மின்னஞ்சல் எக்ஸ் ஆபாசமான, அவதூறான அல்லது எரிச்சலூட்டும் கருத்துக்களை இடுகையிடுவதைத் தவிர்க்கவும், மேலும் எந்தவொரு சமூகத்திற்கும் எதிராக

மேலும் படிக்க »
CCI_UDHindu_KSL_UQ561T8Q4_R1561280480_3_2928fc4e-a7b4-428a-9d73-1b3ed0b267e4.jpg

தனிநபர் கடன்கள் தொடர்ந்து கடன் விரிவாக்கத்தை தூண்டுகிறது என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது

இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய காலாண்டு அடிப்படைப் புள்ளிவிவர அறிக்கையின்படி, தனிநபர் கடன்கள் தொடர்ந்து கடன் விரிவாக்கத்திற்கு வழிவகுத்தன, ஒட்டுமொத்த வங்கிக் கடன் வளர்ச்சி (yoy) 2022 டிசம்பர் இறுதி வரை 16.8 சதவீதமாக

மேலும் படிக்க »
Written and directed by Muthaiya, the film is backed by Drumsticks Productions in association with Zee Studios

ஆர்யாவின் காதர் பாஷா எந்திர முத்துராமலிங்கம் படத்தின் டீசர் இந்த தேதியில் வெளியாகும் – சினிமா எக்ஸ்பிரஸ்

ஆர்யாவின் கதர் பாஷா எந்திர முத்துராமலிங்கத்தின் டீசர் மார்ச் 31 ஆம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பாளர்கள் செவ்வாய்க்கிழமை அறிவித்தனர். முத்தையா எழுதி இயக்கிய இந்தப் படத்தை, ஜீ ஸ்டுடியோஸுடன் இணைந்து டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ்

மேலும் படிக்க »
error: Content is protected !!
Scroll to Top