TamilMother

tamilmother.com_logo

4000 அடி உயரம்.. வானில் இருந்து குதித்த டிக்டாக் பிரபலம்! விரியாத பாராசூட்டால் தரையில் விழுந்து பலி

tanyapardazi

ஒட்டாவா: கனடாவில் 21 வயது நிரம்பிய டிக்டாக் பிரபலமான கல்லூரி மாணவி சாகசம் செய்வதற்காக ‛ஸ்கைடைவிங்’ முறையில் வானில் 4000 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்தபோது பாராசூட் செயல்படாததால் தரையில் விழுந்து பரிதாபமாக பலியான அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

கனடாவை சேர்ந்தவர் தான்யா பர்டாஷி (வயது 21). இவர் டொரண்டா பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இவர் 2017ல் நடைபெற்ற ‘மிஸ் டீன் கனடா’ அழகி போட்டியில் பங்கேற்றார். இந்த போட்டியில் ‛செமி பைனல்’ வரை அவர் சென்றார். இதன்மூலம் அவர் அதிகளவில் புகழ் பெற்றார்.

மேலும் டிக்டாக்கில் வீடியோக்கள் வெளியிட்டதால் அவர் இன்னும் பிரபலமடைந்தார். இவருக்கு சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

சாகசத்தில் ஆர்வம் இந்நிலையில் தான்யா அவ்வப்போது சாகச சம்பவங்களை செய்து டிக்டாக், இன்ஸ்டா ஆகியவற்றில் பதிவிட்டு ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளார். சமீபகாலமாக அவர் ‛ஸ்கைடைவிங்’கில் ஆர்வம் கொண்டார். பயிற்சியாளருடன் சேர்ந்து அவர் பலமுறை ‛ஸ்கைடவிங்’ செய்து சாகசத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பான வீடியோக்களை அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதற்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளி கொடுத்தனர்.

பிரத்யேக பயிற்சி இதன் தொடர்ச்சியாக அவர் தனியாக ‛ஸ்கைடைவிங்’ சாகசம் செய்ய முடிவு செய்தார். இதற்கான பிரத்யேக பயிற்சியையும் அவர் மேற்கொண்டார். இந்த பயிற்சியை முடித்த அவர் தனியாக ‛ஸ்கைடைவிங்’ செய்ய உரிமம் பெற்றார். இதையடுத்து அவர் தனியாக ‛ஸ்கைடைவிங்’ செய்ய முடிவு செய்தார்.

4000 அடியில் சாகசம் அதன்படி விமானத்தில் இருந்து 4 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து தான்யா குதித்தார். வானில் மிதந்த நிலையில் அவர் குறிப்பிட்ட இடைவெளிக்கு பிறகு பாதுகாப்புக்காக தரையிறங்கும் வகையில் பாராசூட்டை பயன்படுத்த முயன்றார். ஆனால் பாராசூட் முழுமையாக விரிந்து செயல்படவில்லை. இதனால் தான்யா பார்டஷி அதிர்ச்சியடைந்தார்.

தரையில் விழுந்து பலத்த காயம் மேலும் அவர் தரையில் வந்து பொத்தென விழுந்தார். இதில் அவர் பலத்த காயமடைந்து மயங்கினார். இதையடுத்து அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். இதையடுத்து தான்யா பார்டஷி உயிரிழந்ததை ‛ஸ்கைடைவிங்’ குழு உறுதி செய்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


நம்ப முடியவில்லை இதுபற்றி தான்யா தோழி மெலோடி ஒல்கோலி கூறுகையில், ‛‛தான்யா எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார். வாழ்க்கையில் ஒவ்வொரு வினாடியையும் மகிழ்ச்சியாக வாழ நினைத்தார். அதன்படி மகிழ்ச்சியாக வாழ்ந்தார். தற்போது அவர் இறந்துள்ளதாக கூறும் சம்பவத்தை நம்ப முடியவில்லை. இது மிகவும் சோகமானது” என்றார்.

1679573832_photo.jpg

Credit Suisse: Credit Suisse ஒப்பந்தம் நெருக்கடியை நிறுத்தியதாக சுவிஸ் மத்திய வங்கி கூறுகிறது

ஜெனீவா: சுவிஸ் மத்திய வங்கி வியாழன் அன்று அதன் முக்கிய வட்டி விகிதத்தை உயர்த்தியது மற்றும் சிக்கலில் உள்ள கிரெடிட் சூயிஸை அரசாங்கத்தால் திட்டமிடப்பட்ட போட்டி வங்கியால் கையகப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியது. யுபிஎஸ்

மேலும் படிக்க »
98943589.jpg

கங்கனா ரனாவத்தின் பயணத்தை திரும்பிப் பார்க்கும்போது, ​​’உயரமான மலையிலிருந்து வாழ்க்கையைப் பார்த்தேன்’ என்று ஒருமுறை கூறியிருந்தார் | இந்தி திரைப்பட செய்திகள்

பிறந்தநாள் பெண் கங்கனா ரனாவத் அதிகபட்ச வாழ்க்கை வரலாற்று கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்: மோனிகா பேடி தனது முதல் படமான கேங்ஸ்டரில், பர்வீன் பாபி வோ லாம்ஹே, மதுபாலா ஒன்ஸ் அபான் எ டைம் இன்

மேலும் படிக்க »
98939581.jpg

பெருங்குடல் புற்றுநோய் அறிகுறிகள்: இந்தியாவில் பெருங்குடல் புற்றுநோய் வழக்குகள் அதிகரித்து வருவதால், இந்த ஆரம்ப அறிகுறிகளைத் தவறவிடாதீர்கள்

புற்றுநோய், நாம் அனைவரும் அறிந்தபடி, உலகளவில் மரணத்திற்கு இரண்டாவது முக்கிய காரணமாகும். மார்ச் மாதம் பெருங்குடல் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. எந்தவொரு புற்றுநோய்க்கும் வரும்போது ஆரம்பகால நோயறிதலைப் பெறுவது மிகவும் முக்கியமானது, ஆனால்

மேலும் படிக்க »
lupin-receives-tentative-usfda-approval-for-obeticholic-acid-tablets.jpg

லூபின் ஒபிடிகோலிக் அமில மாத்திரைகள், ஹெல்த் நியூஸ், ET ஹெல்த் வேர்ல்ட் ஆகியவற்றிற்கான தற்காலிக யுஎஸ்எஃப்டிஏ ஒப்புதலைப் பெறுகிறது

2014-க்கு முன் 387 ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகள் தற்போது 660 ஆக 71 சதவீதம் உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளது. 2014 இல் 51,348 இடங்கள் இருந்த நிலையில்

மேலும் படிக்க »
129092940_gettyimages-1469489996.jpg

ஆரோன் சோர்கின் தனக்கு பக்கவாதம் ஏற்பட்டதை வெளிப்படுத்துகிறார்: ‘இது ஒரு உரத்த விழிப்பு அழைப்பு’

வெஸ்ட் விங் உருவாக்கியவர் பயத்தை “ஒரு உரத்த விழிப்பு அழைப்பு” என்று விவரிக்கிறார், ஆனால் அவர் இப்போது “நன்றாக இருக்கிறார்” என்று கூறுகிறார்.

மேலும் படிக்க »
1679573083_photo.jpg

‘ராகுல் டிராவிட்டிற்கு எனது சேவையை வழங்கினேன் ஆனால் அவர் கூறினார்…’: லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் | கிரிக்கெட் செய்திகள்

புதுடெல்லி: இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வாழ்நாள் முழுவதும் ஜென்டில்மேன் மற்றும் விளையாடும் நாட்களில் மிகவும் விரும்பப்பட்ட கிரிக்கெட் வீரராக இருந்துள்ளார். முன்னாள் இந்திய லெக் ஸ்பின்னர் மற்றும் தற்போது வர்ணனையாளராக உள்ளார்

மேலும் படிக்க »
error: Content is protected !!
Scroll to Top