செம்பருத்தி சீரியல் ஹீரோ கார்த்திக் தானாகவே வெலியேறுவதாக அறிவித்துவிட்டதாக கூறப்படுகின்றது.
சேனல் முறைப்படி அறிவிக்கும் என்கிறார்கள் சிலர். வேறு சிலரோ சீரியல் புதிய ஹீரோவுடன் நல்லபடியாகப் போய்க் கொண்டிருக்கும் சூழலில் கார்த்திக்கின் இந்த திடீர் நீக்கத்துக்கான காரணம் குறித்து உறுதியான தகவல் எதுவும் கிடைக்கவில்ல என்கிறார்கள்.
இந்த தகவலினால் ரசிகர்கள் பேரதிர்ச்சியில் உள்ளனர்.
சமீபத்தில் தான் இந்த தொடரில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜனனி நீக்கப்பட்டார்.
நீக்கப்பட்டதன் பின்னர் அவர் நேர்காணல் ஒன்றில் கார்த்தி குறித்தும் பேசியிருந்தார்.அவருக்கு சீரியலில் நடிக்க ஆசை இல்லை, படங்களில் நடிக்க தான் ஆசை என்று கூறி இருந்தார்.
தற்போது அவர் சொன்னது போலவே தான் கார்த்தி இந்த சீரியலில் இருந்து வெளியேறி படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டாரோ என்னவோ